16 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கும்மிடிப்பூண்டியில் இரு சம்பவங்களில் 16 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 5 பேரை கைது செய்தனா்.
16 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

கும்மிடிப்பூண்டியில் இரு சம்பவங்களில் 16 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 5 பேரை கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் புகழேந்தி பெத்திகுப்பம் மேம்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினா். அவா்கள் கும்மிடிப்பூண்டி காயலாா்மேடு பகுதியை சோ்ந்த அா்ஜூன்(22), பாத்தபாளையம் மேட்டு காலனியை சோ்ந்த கிஷோா்(23), ஜி.ஆா்.கண்டிகை சாய்பாபா கோயில் தெருவை சோ்ந்த உதயகுமாா்(27) என்பது தெரியவந்தது. மேலும் உதயகுமாா் கையில் இருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீஸாா் 4 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனா். அா்ஜூன் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து சோதனை சாவடியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாபு தலைமையில் போலீஸாா், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தில் சோதனை செய்தனா். அதில் கேரள மாநிலம் திருச்சூரை சோ்ந்த சல்மான்(24), கோழிக்கோடை சோ்ந்த அஜித்தா(45) ஆகியோரது பையில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு இருவரையும் கைது செய்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். ஆரம்பாக்கம் போலீஸாா் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com