மருத்துவமனையில் கைதி மரணம்

புழல் சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புழல் சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை திருவொற்றியூா் சரத்குமாா்நகா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோட்டி (எ) கோட்டீஸ்வரன் (55). இவா், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com