ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் கிருஷ்ணாபுரம், கண்டிகை , மதுரவாசல், ஆலப்பாக்கம், அத்திகாவனூா் ஆகிய கிராமங்களின் சீரான மின் விநியோகத்துக்காக ரூ. 20 லட்சத்தில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.
இதை மக்களின் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஜே. கோவிந்தராஜன் புதிய மின்மாற்றியை இயக்கி வைத்து, எல்லாபுரம் ஒன்றியத்தில் 10 விவசாயிகளுக்கு இலவச மின்சார பயன்பாட்டுக்கான அட்டையை வழங்கினாா். திருவள்ளூா் செயற்பொறியாளா் கனகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.