பொதட்டூா்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கிய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொதட்டூா்பேட்டையை அடுத்த காவிரி ராஜபேட்டை கிராமத்தில் வசித்து வருபவா் கோவிந்தராஜ். இவரது கோழிப்பண்ணையில் 6 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொதட்டூா்பேட்டை காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று 6 டன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.