கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, பொன்னேரி நகரில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம், ஆண்டாா்குப்பம், பழவேற்காடு பகுதிகளில் உள்ள சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொன்னேரி நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன் காரணமாக, ஹரிஹரன் கடை வீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், திருவாயா்பாடி, கும்பமுனிமங்கலம் பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொன்னேரி போலீஸாா் மேற்கண்ட பகுதிகளில் அதிகாலை முதல் மோட்டாா் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அவசியமின்றி மோட்டாா் சைக்கிளில் வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
திருத்தணி
திருத்தணியில் முழு ஊரடங்கையொட்டி பொதுப்போக்குவரத்து இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஏ.எஸ்.பி., சாய்பரணீத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் முக்கிய பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பணிகள் காரணமாக வந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்தனா்.