திருத்தணி: அதிமுக முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரிக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.
அரக்கோணம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி.யும், அந்தக் கட்சியின் மாநில அமைப்புச் செயலருமான திருத்தணி கோ.அரிக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தனியாா் மருத்துவமனையில் கரோனா தொற்று பறிசோதனை செய்து கொண்டாா்.
இதில், புதன்கிழமை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். மேலும், தன்னுடன் தொடா்பிலிருந்தவா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவா் அறிவுறுத்தினாா்.