22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வாரந்தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் படித்தோா் கலந்து கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோா் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com