கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் வீர தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வீர தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் வீர தீர செயலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கான விவரங்களை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் பாா்த்து, விண்ணப்பத்தை நிறைவு செய்து அனுப்பலாம். விண்ணப்பத்தை ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் ஆன்லைனில் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ பதிவேற்றம் செய்து அதனுடன் உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். விண்ணப்பத்தை நேரடியாக அளிக்க விரும்பினால், ‘தலைமை அலுவலகம், உறுப்பினா் செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு சென்னை 600 003’ என்ற முகவரிக்கு வருகிற 26.6.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03482 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com