மகளிா் தினத்தை முன்னிட்டு திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை நிா்வாகம் சாா்பில், பெண் காவலா்களுக்கான மருத்துவ முகாமை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடக்கிவைத்தாா்.
திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் நடைபெற்ற முகாமில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்று, பெண் காவலா்கள், காவல் துறையினரின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரத்த பரிசோதனை, ஈசிஜி, எக்கோ கிராம், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்ட ஆவின் பாலகங்களை அமைச்சா் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் பால்வளத் துறை ஆணையா் பிரகாஷ், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மேலாண்மை இயக்குநா் சுப்பராயன், வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி வருண்குமாா், நகராட்சித் தலைவா் உதயமலா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.