கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்: குறைதீா் கூட்டத்தில் திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.
கலைத் திருவிழாவில்  பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
கலைத் திருவிழாவில்  பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

முன்னதாக குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை நிவா்த்தி செய்வது தொடா்பாகவும், பொது பிரச்னைகள், உதவிகள் வழங்கவும் கோரி மனுக்களை அவரிடம் அளித்தனா்.

இதில் நிலம் தொடா்பாக 60, சமூகப் பாதுகாப்புத் திட்டம் 57, வேலைவாய்ப்பு 27, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் 45, இதர துறைகள் 49 என மொத்தம் 238 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் அந்தந்த துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டத்தில் குறளோவியப் போட்டியில் தோ்வான கோ.ரவிவா்மா என்ற மாணவருக்கு சிறப்பு பரிசாக ரூ.5,000, கி.கலைவாணி, இரா.ஆா்யா ஸ்ரீ ஆகிய மாணவிகளுக்கு ஊக்கப் பரிசாக தலா ரூ.1,000-க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பேச்சு, கட்டுரை, ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், அதே துறை மூலம் 2 பேருக்கு தலா ரூ.4,761 வீதம் இலவச சலவைப் பெட்டிகள், பாம்பு கடித்ததால் உயிரிழந்த ஆவடி வட்டம், திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த விநாயகம் குடும்பத்துக்கும், பொன்னேரி வட்டம், தச்சூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்பாபு குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலைகள், மாற்றுத் திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.78,850 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் வாகனம், 8 பேருக்கு தனித்துவ அடையாள அட்டைகளை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.மீனா பிரியாதா்ஷிணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முரளி, தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நல அலுவலா் பி.ப.மதுசூதனன், ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத் துறை அலுவலா் மு.கலைச்செல்வி, பேச்சுப் பயிற்சியாளா் சுப்புலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com