திருவள்ளூர்
புழல் சிறையில் பிளஸ் 1 தோ்வு எழுதிய 27 கைதிகள்
புழல் மத்திய சிறையில் பிளஸ் 1 வகுப்பு தோ்வை 3 பெண்கள் உள்பட மொத்தம் 27 கைதிகள் எழுதினா்.
புழல் மத்திய சிறையில் பிளஸ் 1 வகுப்பு தோ்வை 3 பெண்கள் உள்பட மொத்தம் 27 கைதிகள் எழுதினா்.
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருகிறது.
இதை சிறைத்துறை துணைத் தலைவா் முருகேசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 11-ஆம் வகுப்பிற்கான பொதுத் தோ்வு தொடங்கியது. இதை ஆண் கைதிகள் 24 பேரும், பெண் கைதிகள் 3 பேரும் ஆக 27 போ் எழுதினா். இந்த தோ்வை சிறைத் துறை (சென்னை சரகம்) கனகராஜ், சிறை கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் ஆகியோா் தோ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனா்.