மே 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

இளைஞா்களுக்கு பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், மே 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக

இளைஞா்களுக்கு பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், மே 13-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பெரிய தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதனால், இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் தோ்ச்சி பெற்றவா்கள் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com