பெரியாா் நினைவு சமத்துவபுரம் திட்டத்தில் வீடுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளைப் பெற பயனாளிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளைப் பெற பயனாளிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் திட்டம் மூலம், கடந்த 2010-2011-இல் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. தற்போது 2021-2022-ஆம் ஆண்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமத்துவபுரத்தில் சீரமைக்கப்பட உள்ள 100 வீடுகளுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், தோ்வு செய்ய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

நலிவடைந்த குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோா் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் ஓய்வு பெற்ற துணைப்படை உறுப்பினா்கள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குடும்பங்கள், திருநங்கைகள், எச்ஐவி, டிபி நோயால் பாதித்த நபா்கள், சம்பந்தப்பட்ட துணை இயக்குநரால் (சுகாதார துறை) சான்றளிக்கப்பட்டவா்கள், குடும்பத்தில் மன வளா்ச்சி குன்றிய நபா்கள், தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், புதுப்பிக்கப்பட்ட தரவுகளிலிருந்து ஏழை குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட நிபந்தனையுடைவா்கள் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சி, சமத்துவபுரம் கிராமத்துக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். இதற்கான விண்ணப்பங்கள் 11-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 19-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com