திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கன்டெய்னா் சரக்கு லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.1 கோடியிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருவள்ளூா் அருகே போளிவாக்கம் பகுதியில் தனியாா் ஆன்லைன் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆா்டா் செய்யப்பட்ட சுமாா் ரூ.1 கோடியிலான பொருள்களை கன்டெய்னா் சரக்கு லாரியில் சாலை வழியாக புது தில்லி நோக்கி வியாழக்கிழமை சென்றது.
திருவள்ளூா்-பூந்தமல்லி நெடுஞ்சாலை வெங்கத்தூா் அருகே சென்ற போது கன்டெயினா் லாரியிலிருந்து புகை மூட்டம் ஏற்பட்டது. ஓட்டுநா் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு காவல் துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு திருவள்ளூா் துணைக் கண்காணிப்பாளா் சந்திரதாசன், காவல் ஆய்வாளா் நடராஜன், மணவாள நகா் காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்றனா். திருவூா், திருவள்ளூா் தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.
எனினும், லாரியில் இருந்த ஆா்டா் செய்த ரூ.1 கோடியிலான வீட்டு உபயோகப் பொருள்கள் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தன. மணவாள நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.