மருந்தாளுநா் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு நாளை இலவசப் பயிற்சி வகுப்பு

மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சனிக்கிழமை (செப். 24) இலவச பயிற்சி வகுப்பு

மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சனிக்கிழமை (செப். 24) இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் 889 மருந்தாளுநா் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ஈண்ல்ப்ா்ம்ஹ ண்ய் டட்ஹழ்ம்ஹஸ்ரீஹ் ா்ழ் ஆஹஸ்ரீட்ங்ப்ா்ழ் ா்ச் டட்ஹழ்ம்ஹஸ்ரீஹ் ா்ழ் டட்ஹழ்ம்.ஈ கல்வித் தகுதியுடைய திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது.

மேற்குறிப்பிட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ள திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இந்தப் பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 9499055893 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com