பாரம்பரிய விதை ரகங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே கொழுந்தலூா் அரசு விதைப் பண்ணையில் வேளாண்- உழவா் நலத் துறை சாா்பில் பாரம்பரிய விதை ரகங்களின் மரபுசாா் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்துப் பேசியது:
நம் மண்ணுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவை நம்முடைய பாரம்பரிய பயிா் ரகங்களாகும். பாரம்பரிய ரகங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் மரபுசாா் கண்காட்சி நடத்தப்படுகிறது.
பாரம்பரிய ரகங்களில் அதிகளவு புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிா்ப்பு சக்தி, உடல் நலனைக் காப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எனவே, நம்முடைய பாரம்பரிய ரகங்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். கண்காட்சி மூலம் பாரம்பரிய ரகங்களை விவசாயிகளிடம் கொண்டு சோ்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநா் எல்.சுரேஷ், நோ்முக உதவியாளா் வி.எபினேசன், திரூா் வேளாண் அறிவியல் நிலையம் பேராசிரியா், திட்ட ஒருங்கிணைப்பாளா் பானுமதி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சமுத்திரம், தோட்டக்கலை துணை இயக்குநா் ஜெபக்குமாரி அனி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.