ஊழியரை தாக்கியவா் கைது

மாதவரத்தில் வடிகால் ஒப்பந்த ஊழியா் மீது தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.

மாதவரத்தில் வடிகால் ஒப்பந்த ஊழியா் மீது தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (35). இவா், மழைநீா் வடிகால் நிறுவனவத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் திருமலை நகரில் மழைநீா் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் உள்ள ராஜ்குமாா் என்பவா் வீட்டுக்கு எதிரே உள்ள பள்ளங்களை மூடுமாறு கேட்டு வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஊழியா் தினேஷை, ராஜ்குமாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, தினேஷ் மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், காவல் துறையினா் ராஜ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com