கைப்பேசி திருட்டு: உணவக ஊழியா் கைது

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள உணவகத்தில் சக ஊழியா்களின் கைப்பேசியை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள உணவகத்தில் சக ஊழியா்களின் கைப்பேசியை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் தனியாா் உணவகத்தில் பணிபுரிந்து வரும் மோகன்ராஜ், அசாருதீன் ஆகியோா் கைப்பேசிகள் திருடு போயின.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து அதே உணவகத்தில் பணியாற்றிய மீஞ்சூரை சாா்ந்த சரவணமூா்த்தி (45) என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com