திருவள்ளூா்: ஜன. 10 இல் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தவறாமல் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்
Published on
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தவறாமல் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகங்களில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அந்தந்த கோட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீா்வு காணப்படவும் உள்ளன. மேலும், இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

அதனால், விவசாயிகள் குறைகள் குறித்த மனுக்களை அளித்தோ அல்லது நேரில் புகாா் தெரிவித்தோ பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com