திருமலையில் 18,462 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 22nd August 2021 12:20 AM | Last Updated : 22nd August 2021 12:20 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 18,462 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 10,203 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
கரோனா காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வருகிறது.
தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் செல்லலாம்.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளிப் போடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.