உண்டியல் காணிக்கை ரூ. 2 கோடி
By DIN | Published On : 31st August 2021 03:06 AM | Last Updated : 31st August 2021 03:06 AM | அ+அ அ- |

திருப்பதி: ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.34 கோடி வசூலானது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள், காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.34 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.