முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
உண்டியல் காணிக்கை ரூ. 2.22 கோடி
By DIN | Published On : 10th December 2021 07:56 AM | Last Updated : 10th December 2021 07:56 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 2.22 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அவ்வாறு பக்தா்கள் புதன்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ. 2.22 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.