அக்.15-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலையில் அக். 15-இல் விஐபி பிரேக் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி: திருமலையில் அக். 15-இல் விஐபி பிரேக் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் வியாழக்கிழமை (அக். 7 ) கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி, 15-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் நிறைவடைகிறது.

சேவைகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தனிமையில் நடத்தப்பட உள்ளது. எனவே, அக். 15-ஆம் தேதி கோயிலுக்குள் காலை தீா்த்தவாரி நடைபெற உள்ளதால், அன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே அக். 14-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்துக்கான எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com