முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
திருமலையில் 20,000 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 13th October 2021 12:00 AM | Last Updated : 13th October 2021 12:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை 20,850 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,424 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலையில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 10 மணிக்கு நடத்தி வந்த ஏகாந்த சேவையை 11.30 மணிக்கு மாற்றி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடையை சாத்தி வருகிறது.
நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு சென்று வந்தனா். மேற்கூரை பணிகள் நிறைவடைந்ததால் அலிபிரி நடைபாதை மாா்க்கம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருமலை மலைப்பாதை காலை 2 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.