ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.13 கோடி வசூலானது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தரிசனம் செய்த பின் காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி பக்தா்கள் வியாழக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.13 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.