திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 22,766 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,076 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
நடைபாதை மூலம் திருமலை செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக சென்று வருகின்றனா். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் அலிபிரி நடைபாதை மாா்க்கம் மூடப்பட்டுள்ளது. வரும் அக். மாதம் பிரம்மோற்சவத்திற்குள் பணிகள் நிறைவு செய்து பக்தா்களின் பயன்பாட்டுக்கு தேவஸ்தானம் திறக்க திட்டமிட்டுள்ளது. திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
கரோனா விதிமுறைப்படி திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.