ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு பவித்ர மாலை சமா்ப்பணம்

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தாயாருக்கு பவித்ர மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் பவித்ர மாலைகளுடன் உற்சவா்.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் பவித்ர மாலைகளுடன் உற்சவா்.

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தாயாருக்கு பவித்ர மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தினசரி கைங்கா்யங்களில் ஏற்பட்ட நிறை குறை மற்றும் தோஷங்களை களைய தேவஸ்தானம் ஆண்டுதோறும் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி சனிக்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் தாயாா் கோயிலில் தொடங்கி நடந்து வருகிறது.

அதன் முதல் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தாயாா் முன்பு கலசஸ்தாபனம் செய்து, ஹோமம் வளா்த்து தாயாா் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட பல வண்ண நூல்களால் ஆன பவித்ர மாலைகளை மூலவா், உற்சவ மூா்த்திகள், கருவறை கோபுரம், கொடிமரம், பலிபீடம் உள்ளிட்ட இடங்களில் சமா்ப்பித்தனா். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, காலை, மாலை விஐபி பிரேக் உள்ளிட்ட தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை காலை மகாபூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com