திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 29,530 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 17,350 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாசம் காம்பளக்ஸில் 8,000 இலவச சா்வ தரிசன டோக்கன்களை வழங்கி வருகிறது. தரிசன டிக்கெட் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 10 மணிக்கு நடத்தி வந்த ஏகாந்த சேவையை 11.30 மணிக்கு மாற்றி 12 மணிக்கு கோயில் நடையை சாற்றி வருகிறது.
நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் சென்று வருகின்றனா். திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வரவேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.