திருமலையில் 29,821 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 29,821 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,787 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 29,821 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,787 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவையும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அக். 31-ஆம் தேதி வரைக்கான தரிசன டிக்கெட் முன்பதிவுகள் முடிவடைந்து விட்டன. தரிசன அனுமதி உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 10 மணிக்கு நடத்தி வந்த ஏகாந்த சேவையை 11.30 மணிக்கு மாற்றி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடையை சாத்தி வருகிறது.

திருமலைக்கு நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக சென்று வருகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com