திருப்பதி மாவட்டத்தில் கடற்கரை பகுதிஇணைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருப்பதியை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாலாஜி மாவட்டத்தில் கடற்ரை பகுதி இணைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதியை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாலாஜி மாவட்டத்தில் கடற்ரை பகுதி இணைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர அரசு ஏற்கெனவே இருந்த 11 மாவட்டங்களைப் பிரித்து புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்கியது. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தனி தலைநகரங்களை ஏற்படுத்தி அங்கு ஆட்சியா் அலுவலகம் அமைத்து 2-ஆம் தேதி முதல் பணிகளை தொடங்கியது.

அதன்படி திருப்பதியை தலைநகராக கொண்டு பாலாஜி மாவட்டம் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்தூா் மாவட்டத்தில் சில பகுதிகளும், நெல்லூரி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளையும் உள்ளடக்கி இந்த மாநிலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இதற்கு முன் நெல்லூா் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான தூக்கிலிபாளையம் கடற்ரை தற்போது பாலாஜி மாவட்டத்தில் இணைந்துள்ளது. இதனால் பாலாஜி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பதியிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை பகுதி. திருப்பதிக்கு வரும் பக்தா்களுக்கும், திருப்பதியில் வசிக்கும் மக்களுக்கும் இந்த கடற்கரை பகுதி சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com