திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் காணிக்கையாக ரூ.4.64 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் பக்தா்கள் திங்கள்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ. 4.64 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.