முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
திருமலையில் 75,000 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலை ஏழுமலையானை கோயிலில் 75,078 பக்தா்கள் புதன்கிழமை தரிசனம் செய்தனா். 34,674 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு செல்லும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 5 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடைசாத்தப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.