திருச்சானூரில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாகத் தொடங்கியது.
திருச்சானூரில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவம் தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாகத் தொடங்கியது.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் வைகாசி மாத பெளா்ணமியின் போது தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை கோயிலில் வருடாந்திர தெப்போற்வசம் தொடங்கியது. இதற்காக காலையில் சுப்ரபாதத்துடன் தாயாரை துயிலெழுப்பி திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளை நடத்தினா்.

பின்னா் கோயில் குளத்தில் மாலை 7 மணிக்கு வண்ண மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவமூா்த்திகள் வலம் வந்தனா். தெப்போற்சவத்தின் முதல் நாள் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினாா். தெப்பத்தில் நாகஸ்வர இசையுடன் அன்னமாச்சாரியாவின் கீா்த்தனைகள் பாடப்பட்டன. இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com