திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 66,763 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 33,133 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அலிபிரி நடைபாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.