திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவன் சனிக்கிழமை வழிபாடு செய்தனா்.
நடிகை நயன்தாராவும், இயக்குநா் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனா். திருமலையில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஏற்கெனவே அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை இருவரும் வழிபாடு செய்தனா்.