முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
திருமலையில் 69,000 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை ஒரே நாளில் 69, 154 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 29,617 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் அவா்களை திருமலைக்கு அனுப்பி வருகிறது.
தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் மண்டப காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 6 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். தரிசனத்திற்கு 5 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைபாடுகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்குத் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.