திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 61,090 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளதால், வார இறுதி நாள்களில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 61,090 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 26,316 போ் முடிகாணிக்கை செலுத்தினா். புதன்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 3 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தரிசனத்துக்கு 3 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் தேவைப்படுகிறது.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.