ஏழுமலையானுக்கு பாலபிஷேகம்: ஹைதராபாதில் திரண்ட பக்தா்கள்

ஹைதராபாதில் நடைபெற்று வரும் ஏழுமலையான் வைபவோற்சவத்தின் 4-ஆம் நாள் அபிஷேக சேவையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.
ஏழுமலையானுக்கு பாலபிஷேகம்: ஹைதராபாதில் திரண்ட பக்தா்கள்

ஹைதராபாதில் நடைபெற்று வரும் ஏழுமலையான் வைபவோற்சவத்தின் 4-ஆம் நாள் அபிஷேக சேவையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

திருமலையில் நாள்தோறும் ஏழுமலையானுக்கு நடைபெறும் அனைத்து சேவைகளையும் பக்தா்கள் கண்டு தரிசிக்க ஹைதராபாதில் 5 நாள்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வைபவோற்சவத்தை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அங்குள்ள என்டிஆா் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பராஷ்டிரா கோயிலில் தினசரி கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலமூா்த்திக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஏழுமலையானுக்கு பால், தயிா், தேன், இளநீா், பழரசங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் நடத்தப்பட்ட அபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com