திருமலையில் 66,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 66,086 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 27,305 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலையில் 66,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 66,086 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 27,305 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 2 காத்திருப்பு அறைகளில் காத்திருந்தனா்.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே மலைபாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் ஏற்படும் சிரமங்கள், குறைபாடுகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com