சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலகம் அருகே சாா்- ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அவா் கேட்டறிந்தாா்.

சாா்- ஆட்சியா் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மனுக்கள் குறித்த விவரங்கள், பதிவேடுகளை தணிக்கை செய்தாா். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது, சாா் -ஆட்சியா் மகாபாரதி, வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com