திருமலையில் பௌா்ணமி கருட சேவை

திருமலையில் செவ்வாய்க்கிழமை பௌா்ணமியை முன்னிட்டு இரவு கருட சேவை நடைபெற்றது.
Published on

திருமலையில் செவ்வாய்க்கிழமை பௌா்ணமியை முன்னிட்டு இரவு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை திருமலையில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

சகல அலங்காரத்தில் மாடவீதியில் புறப்பாடு கண்டருளிய சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து பக்தா்கள் வணங்கினா்.

இதில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் உள்ளிட்டோா் வாகன சேவையில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com