வைகோ உருவ பொம்மை எரிப்பு:திமுகவினர் 50 பேர் மீது வழக்கு

வந்தவாசியில் வைகோவின் உருவ பொம்மையை எரித்ததாக திமுகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வந்தவாசியில் வைகோவின் உருவ பொம்மையை எரித்ததாக திமுகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து வைகோ அவதூறாக பேசினாராம். இதைக் கண்டித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் வைகோவின் உருவ பொம்மையை திமுகவினர் வியாழக்கிழமை எரித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் அளித்த புகாரின்பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறி உருவ பொம்மையை எரித்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி உள்ளிட்ட 50 பேர் மீது வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com