வந்தவாசியில் வைகோவின் உருவ பொம்மையை எரித்ததாக திமுகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி குறித்து வைகோ அவதூறாக பேசினாராம். இதைக் கண்டித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் வைகோவின் உருவ பொம்மையை திமுகவினர் வியாழக்கிழமை எரித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் அளித்த புகாரின்பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறி உருவ பொம்மையை எரித்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி உள்ளிட்ட 50 பேர் மீது வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.