திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தில் இருந்து விழுந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் முருகன் (51). இவர், கடந்த 6-ஆம் தேதி திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை, ரயில்வே கேட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாராம்.
அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக முருகன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.