திருவண்ணாமலை அருகே 20 பவுன் தங்க நகைகளுடன் கடத்தப்பட்ட ஆசிரியையை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணி செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அவரைக் காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், தனது தங்கையை விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 20 பவுன் தங்க நகைகளுடன் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை மீட்டுத் தருமாறும் அவரது அண்ணன் வெறையூர் போலீஸில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.