பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

செய்யாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

செய்யாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
செய்யாறை அடுத்த பாராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சங்கர் (23). இவர், கடந்த மே 9-ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறியதாகத் தெரிகிறது. அப்போது தவறி விழுந்ததில் காயமடைந்தாராம்.
உறவினர்கள் அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் புதன்கிழமை இறந்தார். தகவலறிந்த செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com