மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாகம்: அமைச்சர் பங்கேற்பு

மழை வேண்டி செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில்  புதன்கிழமை வருண ஜெப மஹாயாகம் நடத்தப்பட்டது.
Published on
Updated on
1 min read

மழை வேண்டி செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில்  புதன்கிழமை வருண ஜெப மஹாயாகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக அம்மா அணி சார்பில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்எல்ஏக்கள் வே.குணசீலன், ஜெயசுதா, ஜெமினி கே.இராமச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் எஸ்.கிருஷ்ணன், சி.நாகப்பன், நகரச் செயலர் ஏ.ஜனார்த்தனம், மாணவரணி மகேந்திரன், அண்ணா தொழிற்சங்கம் அருணகிரி, அவைத் தலைவர் பி.லோகநாதன், கே.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com