கல்லூரிப் பேராசிரியர் வீட்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு

திருவண்ணாமலையில் கல்லூரிப் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலையில் கல்லூரிப் பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையைச் சேர்ந்தவர் விமல்குமார் (40). திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார். இவர், சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றார். மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்ததாம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com