குன்றக்குடி அடிகளாரின் 692-ஆவது ஆண்டு மகா குரு பூஜை

திருவண்ணாமலையில் குன்றக்குடி அடிகளாரின் 692-ஆவது ஆண்டு மகா குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் குன்றக்குடி அடிகளாரின் 692-ஆவது ஆண்டு மகா குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை காலை குன்றக்குடி அடிகளார் கோயிலில் சிறப்பு அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விழாவுக்கு வழக்குரைஞர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இதில், 46-ஆவது மகா சன்னிதானம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய
சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில், சேஷாத்திரி ஆஸ்ரமத் தலைவர் முத்துக்குமாரசாமி, கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன், திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com