வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. இந்த முகாம் தொடர்ந்து 20 நாள்கள் நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி, கல்லூரிச் செயலர் எம்.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியை கோ.சரோஜினி வரவேற்றார்.
சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவன துணை மேலாளர் எ.நயீம்கான் சிறப்புரை ஆற்றினார். சுயவிவர குறிப்பு தயார் செய்வது எப்படி, நேர்காணல் முறைகள் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிப் பேசினார். கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறைப் பேராசிரியை ஜி.சுகன்யா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.