வாகனம் மோதியதில் தொழிலாளி சாவு

திருவண்ணாமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மேல் குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி தருமலிங்கம் (28). இவர், கடந்த 5-ஆம் தேதி சொந்த வேலையாக தனது பைக்கில் திருவண்ணாமலை நோக்கிச் சென்றார்.
திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில்  சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் தருமலிங்கம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு தருமலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com